கர்மஸம்ந்யாஸயோக
அத பம்சமோத்யாயஃ
ஶ்லோக 1
அர்ஜுந உவாச |
ஸம்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புநர்யோகம் ச ஶம்ஸஸி |
யச்ச்ரேய ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுநிஶ்சிதம் ||௫-௧||
மொழிபெயர்ப்பு
அர்ஜுனன் கூறினார்: ஓ ஸ்ரீ கிருஷ்ணா, நீங்கள் கர்ம ஸன்யாஸத்தை (செயல்களைத் துறக்கும் பாதை) புகழ்ந்தீர்கள், மேலும் நீங்கள் கர்ம யோகத்தையும் (பக்தியுடன் வேலை செய்ய) அறிவுறுத்தினீர்கள். இரண்டில் எது அதிக பலன் தரக்கூடியது என்பதை தயவு செய்து தீர்க்கமாக சொல்லுங்கள்.
ஶ்லோக 2
ஶ்ரீபகவாநுவாச |
ஸம்ந்யாஸஃ கர்மயோகஶ்ச நிஃஶ்ரேயஸகராவுபௌ |
தயோஸ்து கர்மஸம்ந்யாஸாத்கர்மயோகோ விஶிஷ்யதே ||௫-௨||
மொழிபெயர்ப்பு
பகவான் கூறினார். கர்ம ஸந்யாஸம் (செயல்களைத் துறத்தல்) மற்றும் கர்ம யோகம் (செயல் யோகம்) இரண்டும் இறுதி இலக்கை நோக்கி இட்டுச் செல்கின்றன, ஆனால் கர்ம ஸன்யாஸத்தை விட கர்ம யோகம் மேலானது.
ஶ்லோக 3
ஜ்ஞேயஃ ஸ நித்யஸம்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி |
நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத்ப்ரமுச்யதே ||௫-௩||
மொழிபெயர்ப்பு
யாரையும் விரும்பாத, வெறுக்காத கர்ம யோகிகளை நித்திய ஸன்யாஸீகளாகக் கருத வேண்டும். ஓ வலிமையான அர்ஜுனா, எல்லாவிதமான பிணக்குகளிலிருந்தும் விடுபட்டதால், அவர்கள் மாயையின் அடிமைத்தனத்திலிருந்து எளிதாக விடுதலை பெறுகிறார்கள்.
ஶ்லோக 4
ஸாங்க்யயோகௌ ப்ருதக்பாலாஃ ப்ரவதந்தி ந பண்டிதாஃ |
ஏகமப்யாஸ்திதஃ ஸம்யகுபயோர்விந்ததே பலம் ||௫-௪||
மொழிபெயர்ப்பு
அறிவில்லாதவர்கள் மட்டுமே ஸாங்க்ய யோகம் (செயல்களைத் துறப்பது), மற்றும் கர்ம யோகம் (பக்தியுடன் பணிபுரிதல்) ஆகியவற்றை வேறுவிதமாகப் பேசுகிறார்கள். இந்த பாதைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துவதன் மூலம், இரண்டின் பலனையும் அடையலாம் என்று உண்மையிலேயே கற்றவர்கள் கூறுகிறார்கள்.
ஶ்லோக 5
யத்ஸாங்க்யைஃ ப்ராப்யதே ஸ்தாநம் தத்யோகைரபி கம்யதே |
ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச யஃ பஶ்யதி ஸ பஶ்யதி ||௫-௫||
மொழிபெயர்ப்பு
கர்ம ஸன்யாஸத்தால் அடையக்கூடியதை கர்ம யோகத்தின் மூலமும் அடையலாம் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். இவ்வாறு கர்ம ஸந்நியாஸத்தையும், கர்ம யோகத்தையும் ஒரே மாதிரியாகப் பார்ப்பவர்கள், உண்மையில் எல்லாவற்றையும் அப்படியே பார்க்கிறார்கள்.
ஶ்லோக 6
ஸம்ந்யாஸஸ்து மஹாபாஹோ துஃகமாப்துமயோகதஃ |
யோகயுக்தோ முநிர்ப்ரஹ்ம நசிரேணாதிகச்சதி ||௫-௬||
மொழிபெயர்ப்பு
பக்தியில் (கர்ம யோகம்) வேலை செய்யாமல் பரிபூரணமான துறவு (கர்ம ஸன்யாஸம்) அடைவது கடினம், ஓ வலிமையான கைகளைக் கொண்ட அர்ஜுனனே, ஆனால் கர்ம யோகத்தில் திறமையான முனிவர் விரைவாக உச்சத்தை அடைகிறார்.
ஶ்லோக 7
யோகயுக்தோ விஶுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரியஃ |
ஸர்வபூதாத்மபூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே ||௫-௭||
மொழிபெயர்ப்பு
புனிதப்படுத்தப்பட்ட புத்திசாலிகளான கர்மயோகிகள் மனதையும் புலன்களையும் கட்டுப் படுத்துகிறார்கள். ஒவ்வொரு உயிரினத்திலும் அனைத்து ஆத்மாக்களின் ஆத்மாவையும் காண்கிறார்கள். எல்லா வகையான செயல்களையும் செய்தாலும் அவர்கள் ஒரு போதும் சிக்குவதில்லை.
ஶ்லோக 8 மற்றும் 9
நைவ கிஞ்சித்கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித் |
பஶ்யஞ்ஶ்ருண்வந்ஸ்ப்ருஶஞ்ஜிக்ரந்நஶ்நந்கச்சந்ஸ்வபஞ்ஶ்வஸந் ||௫-௮||
ப்ரலபந்விஸ்ரு'ஜந்க்ருஹ்ணந்நுந்மிஷந்நிமிஷந்நபி |
இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த இதி தாரயந் ||௫-௯||
மொழிபெயர்ப்பு
கர்ம யோகத்தில் உறுதியாக இருப்பவர்கள், பார்ப்பது, கேட்பது, தொடுவது, முகர்ந்து பார்ப்பது, அசைவது, தூங்குவது, சுவாசிப்பது, பேசுவது, வெளியேற்றுவது, கிரகிப்பது, கண்களைத் திறப்பது, அல்லது மூடுவது போன்றவற்றில் ஈடுபட்டாலும் ‘நான் செய்பவன் அல்ல’ என்று நினைக்கிறார்கள். ஆழ்நிலை அறிவின் ஒளியில். தெய்வீக அறிவின் ஒளியால், பொருள் உணர்வுகள் அவற்றின் பொருள்களில் மட்டுமே செயல்படுவதை அவர்கள் காண்கிறர்.
ஶ்லோக 10
ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி யஃ |
லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா ||௫-௧௦||
மொழிபெயர்ப்பு
தாமரை இலை தண்ணீரால் தீண்டப்படாதது போல, எல்லாப் பற்றுகளையும் விட்டுவிட்டு, தங்கள் செயல்களை கடவுளுக்கு அர்ப்பணிப்பவர்கள், பாவத்தால் தீண்டப்படாமல் இருப்பார்கள்.
ஶ்லோக 11
காயேந மநஸா புத்த்யா கேவலைரிந்த்ரியைரபி |
யோகிநஃ கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்மஶுத்தயே ||௫-௧௧||
மொழிபெயர்ப்பு
யோகிகள், பற்றுதலைக் கைவிட்டு, தங்கள் உடல், புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றைக் கொண்டு சுயச் சுத்திகரிப்புக்காக மட்டுமே செயல்களைச் செய்கிறார்கள்.
ஶ்லோக 12
யுக்தஃ கர்மபலம் த்யக்த்வா ஶாந்திமாப்நோதி நைஷ்டிகீம் |
அயுக்தஃ காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே ||௫-௧௨||
மொழிபெயர்ப்பு
அனைத்து செயல்களின் பலன்களையும் கடவுளுக்கு வழங்குவதன் மூலம், கர்ம யோகிகள் நிரந்தரமான அமைதியை அடைகிறார்கள். அதேசமயம், தங்கள் ஆசைகளால் தூண்டப்பட்டு, சுயநல நோக்கத்துடன் வேலை செய்பவர்கள் தங்கள் செயல்களின் பலனுடன் இணைந்திருப்பதால் சிக்கிக் கொள்கிறார்கள்.
ஶ்லோக 13
ஸர்வகர்மாணி மநஸா ஸம்ந்யஸ்யாஸ்தே ஸுகம் வஶீ |
நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந்ந காரயந் ||௫-௧௩||
மொழிபெயர்ப்பு
உடல் உற்ற ஆன்மாக்கள் பற்றற்று தன்னடக்கத்துடன் தாங்கள் எதையும் செய்தவர்கள் அல்ல என்ற எண்ணங்களோடு ஒன்பது வாயில்கள் கொண்ட நகரத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்
ஶ்லோக 14
ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ரு'ஜதி ப்ரபுஃ |
ந கர்மபலஸம்யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே ||௫-௧௪||
மொழிபெயர்ப்பு
செயலின் உணர்வோ அல்லது செயல்களின் தன்மையோ கடவுளிடமிருந்து வருவதில்லை; கடவுள் செயல்களின் பலனையும் படைக்கவில்லை. இவை அனைத்தும் ஜட இயற்கையின் முறைகளால் (குணங்கள்) இயற்றப்படுகின்றன.
ஶ்லோக 15
நாதத்தே கஸ்யசித்பாபம் ந சைவ ஸுக்ருதம் விபுஃ |
அஜ்ஞாநேநாவ்ரு'தம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவஃ ||௫-௧௫||
மொழிபெயர்ப்பு
எங்கும் நிறைந்த கடவுள் யாருடைய பாவங்களிலும் அல்லது புண்ணியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஜீவராசிகள் மாயைக்கு ஆளாகிறார்கள், ஏனென்றால் அவர்களின் உள் அறிவு அறியாமையால் மூடப்பட்டுள்ளது.
ஶ்லோக 16
ஜ்ஞாநேந து ததஜ்ஞாநம் யேஷாம் நாஶிதமாத்மநஃ |
தேஷாமாதித்யவஜ்ஜ்ஞாநம் ப்ரகாஶயதி தத்பரம் ||௫-௧௬||
மொழிபெயர்ப்பு
ஆனால் தெய்வீக அறிவால் அறியாமையை வென்றவர்களுக்கு சூரியன் உதிக்கும்போது எல்லாவற்றையும் ஒளிரச் செய்வது போல, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உன்னதமான பொருள் வெளிப்படுகிறது.
ஶ்லோக 17
தத்புத்தயஸ்ததாத்மாநஸ்தந்நிஷ்டாஸ்தத்பராயணாஃ |
கச்சந்த்யபுநராவ்ருத்திம் ஜ்ஞாநநிர்தூதகல்மஷாஃ ||௫-௧௭||
மொழிபெயர்ப்பு
யாருடைய புத்தி கடவுளில் நிலைத்து, முழுமையாக மூழ்கி கடவுளையே உயர்ந்த இலக்காக கருதி அசையாத நம்பிக்கையுடன் இருக்கிறதோ, அத்தகைய நபர்கள், அறிவின் ஒளியால் தங்கள் பாவங்கள் அகற்றப்பட்டு, திரும்ப முடியாத நிலையை விரைவாக அடைகிறார்கள்.
ஶ்லோக 18
வித்யாவிநயஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி |
ஶுநி சைவ ஶ்வபாகே ச பண்டிதாஃ ஸமதர்ஶிநஃ ||௫-௧௮||
மொழிபெயர்ப்பு
உண்மையான அறிவாளிகள், தெய்வீக ஞானக் கண்களால், ப்ராஹ்மணரையும், பசுவையும், யானையையும், நாயையும், நாயை உண்பவரையும் சமமாகப் பார்க்கிறார்கள்.
ஶ்லோக 19
இஹைவ தைர்ஜிதஃ ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மநஃ |
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதாஃ ||௫-௧௯||
மொழிபெயர்ப்பு
பார்வையில் சமத்துவத்தில் மனதை நிலைநிறுத்துபவர்கள் இந்த வாழ்க்கையில் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியை வெல்வார்கள். அவர்கள் கடவுளின் குறைபாடற்ற தன்மைகளைக் கொண்டுள்ளனர், எனவே முழுமையான சத்தியத்தில் அமரந்திருக்கிறார்கள்.
ஶ்லோக 20
ந ப்ரஹ்ருஷ்யேத்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்ப்ராப்ய சாப்ரியம் |
ஸ்திரபுத்திரஸம்மூடோ ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்திதஃ ||௫-௨௦||
மொழிபெயர்ப்பு
கடவுளில் நிலைநிறுத்தப்பட்டு, தெய்வீக அறிவைப் பற்றிய உறுதியான புரிதல் உடைய மற்றும் மாயையால் தடைபடாதவர்கள், அவர்கள் இனிமையான ஒன்றைப் பெறுவதில் மகிழ்ச்சியடைவதில்லை அல்லது விரும்பத்தகாததை அனுபவிப்பதில் வருத்தப்படுவதில்லை.
ஶ்லோக 21
பாஹ்யஸ்பர்ஶேஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத்ஸுகம் |
ஸ ப்ரஹ்மயோகயுக்தாத்மா ஸுகமக்ஷயமஶ்நுதே ||௫-௨௧||
மொழிபெயர்ப்பு
புற புலன் இன்பங்களில் பற்று இல்லாதவர்கள் தெய்வீகத்தை சுயமாக உணர்கிறார்கள். யோகத்தின் மூலம் கடவுளோடு ஐக்கியமாகி, அவர்கள் முடிவில்லாத மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர்.
ஶ்லோக 22
யே ஹி ஸம்ஸ்பர்ஶஜா போகா துஃகயோநய ஏவ தே |
ஆத்யந்தவந்தஃ கௌந்தேய ந தேஷு ரமதே புதஃ ||௫-௨௨||
மொழிபெயர்ப்பு
இந்த்ரியப் பொருட்களுடன் தொடர்பு கொள்வதால் ஏற்படும் இன்பங்கள், உலக எண்ணம் கொண்டவர்களுக்கு இன்பமாகத் தோன்றினாலும், உண்மையில் துன்பத்திற்கு ஆதாரமாக இருக்கின்றன. குந்தியின் மகனே, இத்தகைய இன்பங்களுக்கு ஆரம்பமும் முடிவும் உண்டு, அதனால் ஞானிகள் அவற்றில் மகிழ்ச்சியடைவதில்லை.
ஶ்லோக 23
ஶக்நோதீஹைவ யஃ ஸோடும் ப்ராக்ஶரீரவிமோக்ஷணாத் |
காமக்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்தஃ ஸ ஸுகீ நரஃ ||௫-௨௩||
மொழிபெயர்ப்பு
உடலை விடும் முன் ஆசை மற்றும் கோபத்தின் சக்திகளை தடுக்க முடிந்தவர்கள் யோகிகள்; அவர்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
ஶ்லோக 24
யோऽந்தஃஸுகோऽந்தராராமஸ்ததாந்தர்ஜ்யோதிரேவ யஃ |
ஸ யோகீ ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூதோऽதிகச்சதி ||௫-௨௪||
மொழிபெயர்ப்பு
எவர்கள் தங்களுக்குள் மகிழ்ச்சியாக இருப்பார்களோ, கடவுளின் மகிழ்ச்சியை அனுபவித்து, உள்ளொளியால் பிரகாசிக்கிறார்களோ, அத்தகைய யோகிகள் இறைவனுடன் ஐக்கியமாகி ஜட வாழ்விலிருந்து விடுபடுகிறார்கள்.
ஶ்லோக 25
லபந்தே ப்ரஹ்மநிர்வாணம்ரு'ஷயஃ க்ஷீணகல்மஷாஃ |
சிந்நத்வைதா யதாத்மாநஃ ஸர்வபூதஹிதே ரதாஃ ||௫-௨௫||
மொழிபெயர்ப்பு
யாருடைய பாவங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு, சந்தேகங்கள் துடைத்தழிக்கப்பட்டு, எவருடைய மனம் ஒழுக்கம் உடையதாகவும், யார் எல்லா உயிர்களின் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்களோ அந்த புனிதமானவர்கள் கடவுளை அடைந்து ஜட வாழ்விலிருந்து விடுபடுகிறார்கள்.
ஶ்லோக 26
காமக்ரோதவியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம் |
அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே விதிதாத்மநாம் ||௫-௨௬||
மொழிபெயர்ப்பு
இடைவிடாத முயற்சியின் மூலம் கோபம் மற்றும் காமத்திலிருந்து வெளியேறி, தங்கள் மனதை அடக்கி, சுய-உணர்வு பெற்ற ஸன்யாஸிகள் இம்மையிலும் மறுமையிலும் ஜட இருப்பிலிருந்து விடுபடுகிறார்கள்.
ஶ்லோக 27 மற்றும் 28
ஸ்பர்ஶாந்க்ருத்வா பஹிர்பாஹ்யாம்ஶ்சக்ஷுஶ்சைவாந்தரே ப்ருவோஃ |
ப்ராணாபாநௌ ஸமௌ க்ருத்வா நாஸாப்யந்தரசாரிணௌ ||௫-௨௭||
யதேந்த்ரியமநோபுத்திர்முநிர்மோக்ஷபராயணஃ |
விகதேச்சாபயக்ரோதோ யஃ ஸதா முக்த ஏவ ஸஃ ||௫-௨௮||
மொழிபெயர்ப்பு
புற இன்பம் பற்றிய எண்ணங்கள் அனைத்தையும் அடைத்து, புருவங்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் பார்வையை நிலைநிறுத்தி, மூக்கின் உள்வரும் மற்றும் வெளியேறும் மூச்சின் ஓட்டத்தை சமப்படுத்தி, புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, ஆசை மற்றும் பயத்திலிருந்து விடுபடும் ஞானி சுதந்திரமாக வாழ்கிறார்.
ஶ்லோக 29
போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஶ்வரம் |
ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஶாந்திம்ரு'ச்சதி ||௫-௨௯||
மொழிபெயர்ப்பு
அனைத்து யாகங்களையும், துறவறங்களையும் அனுபவிப்பவராகவும், அனைத்து உலகங்களுக்கும் மேலான இறைவனாகவும், அனைத்து உயிர்களின் தன்னலமற்ற நண்பனாகவும் என்னை உணர்ந்து, என் பக்தன் அமைதியை அடைகிறார்.
வெறும் வாசிப்பு மட்டுமல்ல—
சொந்த தியான வீடியோக்களை உருவாக்குங்கள்.
புனிதமான ஸ்லோகங்களை உலகத்துடன் பகிர்ந்துகொள்ள அழகான, சினிமா வீடியோக்களாக மாற்றவும். உங்கள் பின்புலத்தைத் தேர்வுசெய்து, மந்திர உச்சாடனத்தை இணைத்து, நவீன வடிவில் கீதையின் ஒளியைப் பரப்புங்கள்.
இந்த அம்சங்களுக்கு பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
- உயர்தர பின்னணி கலைப்படைப்பு
- ஒத்திசைக்கப்பட்ட சமஸ்கிருதம் மற்றும் பொருள் உரை
- அற்புதமான உச்சாடனம் மற்றும் இசை
ஆழ்ந்த அனுபவத்தைப் பெறுங்கள்
நித்ய கீதையின் முழுப் பதிப்போடு ஒரு சினிமா ஆன்மீகப் பயணத்தைத் தொடங்குங்கள். உயர்தர உச்சாடனம், உண்மையான மொழிபெயர்ப்புகள் மற்றும் உங்கள் உள்ளங்கையில் ஒரு அமைதியான தியான சரணாலயம்.