ராஜவித்யா ராஜகுஹ்யயோக
அத நவமோத்யாயஃ
ஶ்லோக 1
ஶ்ரீபகவாநுவாச |
இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே |
ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஶுபாத் ||௯-௧||
மொழிபெயர்ப்பு
பகவான் கூறினார்: ஓ அர்ஜுனா, நீ என் மீது பொறாமை கொள்ளாததால், இந்த மிக ரகசியமான அறிவையும் ஞானத்தையும் நான் இப்பொழுது உனக்கு வழங்குகிறேன், இதை அறிந்தவுடன் நீ பொருள் இருப்பின் துயரங்களிலிருந்து விடுவிக்கப்படுவாய்.
ஶ்லோக 2
ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரமிதமுத்தமம் |
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸுஸுகம் கர்துமவ்யயம் ||௯-௨||
மொழிபெயர்ப்பு
இந்த அறிவு அறிவியலின் ராஜா மற்றும் அனைத்து ரகசியங்களிலும் மிகவும் ஆழமானது. அதைக் கேட்பவர்களைத் தூய்மைப்படுத்துகிறது. இது நேரடியாக உணரக்கூடிய, அறியக்கூடிய தர்மத்திற்கு இணங்கிய, நடைமுறைப்படுத்த எளிதான, மற்றும் நிரந்தரமானது.
ஶ்லோக 3
அஶ்ரத்ததாநாஃ புருஷா தர்மஸ்யாஸ்ய பரந்தப |
அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மநி ||௯-௩||
மொழிபெயர்ப்பு
இந்த தர்மத்தில் நம்பிக்கை இல்லாதவர்களால் எதிரிகளை வென்றவனாகிய என்னை அடைய முடியாது. ஓ எதிரிகளை வெல்லும் அர்ஜுனா, அவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியில் மீண்டும் மீண்டும் இந்த உலகத்திற்கு திரும்பி வருகிறார்கள்.
ஶ்லோக 4
மயா ததமிதம் ஸர்வம் ஜகதவ்யக்தமூர்திநா |
மத்ஸ்தாநி ஸர்வபூதாநி ந சாஹம் தேஷ்வவஸ்திதஃ ||௯-௪||
மொழிபெயர்ப்பு
இந்த முழு பிரபஞ்ச வெளிப்பாடும் எனது வெளிப்படுத்தப்படாத வடிவத்தில் என்னால் வியாபித்துள்ளது. எல்லா உயிர்களும் என்னில் வசிக்கின்றன, ஆனால் நான் அவற்றில் வசிப்பதில்லை.
ஶ்லோக 5
ந ச மத்ஸ்தாநி பூதாநி பஶ்ய மே யோகமைஶ்வரம் |
பூதப்ரு'ந்ந ச பூதஸ்தோ மமாத்மா பூதபாவநஃ ||௯-௫||
மொழிபெயர்ப்பு
இருப்பினும், உயிர்கள் என்னில் உறைவதில்லை. என் தெய்வீக ஆற்றலின் மர்மத்தைப் பார்! எல்லா உயிர்களையும் நான் படைத்தவனாகவும், பராமரிப்பவனாகவும் இருந்தாலும், நான் அவற்றால் அல்லது ஜட இயற்கையால் பாதிக்கப்படவில்லை.
ஶ்லோக 6
யதாகாஶஸ்திதோ நித்யம் வாயுஃ ஸர்வத்ரகோ மஹாந் |
ததா ஸர்வாணி பூதாநி மத்ஸ்தாநீத்யுபதாரய ||௯-௬||
மொழிபெயர்ப்பு
எங்கும் வீசும் பலத்த காற்று வானத்தில் எப்பொழுதும் தங்கியிருப்பது போல, எல்லா உயிர்களும் எப்பொழுதும் என்னிடத்தில் தங்கியிருக்கின்றன என்பதை அறிந்து கொள்.
ஶ்லோக 7
ஸர்வபூதாநி கௌந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம் |
கல்பக்ஷயே புநஸ்தாநி கல்பாதௌ விஸ்ரு'ஜாம்யஹம் ||௯-௭||
மொழிபெயர்ப்பு
ஒரு கல்பத்தின் முடிவில், அனைத்து உயிரினங்களும் எனது ஆதிப்பொருள் ஆற்றலில் இணைகின்றன. குந்தியின் மகனே, அடுத்த படைப்பின் தொடக்கத்தில், நான் அவற்றை மீண்டும் வெளிப்படுத்துகிறேன். எனது பொருள் ஆற்றலைத் தலைமை தாங்கி, இந்த எண்ணற்ற வடிவங்களை அவற்றின் இயல்புகளின் சக்திக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் உருவாக்குகிறேன்.
ஶ்லோக 8 மற்றும் 9
ப்ரக்ருதிம் ஸ்வாமவஷ்டப்ய விஸ்ரு'ஜாமி புநஃ புநஃ |
பூதக்ராமமிமம் க்ருத்ஸ்நமவஶம் ப்ரக்ருதேர்வஶாத் ||௯-௮||
ந ச மாம் தாநி கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய |
உதாஸீநவதாஸீநமஸக்தம் தேஷு கர்மஸு ||௯-௯||
மொழிபெயர்ப்பு
ஒரு கல்பத்தின் முடிவில், அனைத்து உயிரினங்களும் எனது ஆதிப்பொருள் ஆற்றலில் இணைகின்றன. குந்தியின் மகனே, அடுத்த படைப்பின் தொடக்கத்தில், நான் அவற்றை மீண்டும் வெளிப்படுத்துகிறேன். எனது பொருள் ஆற்றலைத் தலைமை தாங்கி, இந்த எண்ணற்ற வடிவங்களை அவற்றின் இயல்புகளின் சக்திக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் உருவாக்குகிறேன். செல்வத்தை வென்றவரே, இந்த செயல்கள் எதுவும் என்னை பிணைப்பதில்லை. நான் இந்தச் செயல்களில் இருந்து விலகி, நடுநிலையான பார்வையாளனாகவே இருக்கிறேன்.
ஶ்லோக 10
மயாத்யக்ஷேண ப்ரக்ருதிஃ ஸூயதே ஸசராசரம் |
ஹேதுநாநேந கௌந்தேய ஜகத்விபரிவர்ததே ||௯-௧௦||
மொழிபெயர்ப்பு
குந்தியின் மகனே, எனது வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவதால், இந்த பொருள் ஆற்றல் அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற வடிவங்களை உருவாக்குகிறது. இந்த காரணத்திற்காக, பொருள் உலகம் மாற்றங்களுக்கு உட்படுகிறது (உருவாக்கம், பராமரிப்பு மற்றும் கலைத்தல்).
ஶ்லோக 11
அவஜாநந்தி மாம் மூடா மாநுஷீம் தநுமாஶ்ரிதம் |
பரம் பாவமஜாநந்தோ மம பூதமஹேஶ்வரம் ||௯-௧௧||
மொழிபெயர்ப்பு
நான் எனது தனிப்பட்ட வடிவத்தில் அவதரிக்கும் பொழுது மந்தமான புத்தியடைய அலட்சியப்படுத்துபவர்களால் என்னை அடையாளம் காண முடியாது. எல்லா உயிர்களுக்கும் மேலான இறைவனாகிய எனது ஆளுமையின் தெய்வீகத்தன்மையை அவர்கள் அறியவில்லை.
ஶ்லோக 12
மோகாஶா மோககர்மாணோ மோகஜ்ஞாநா விசேதஸஃ |
ராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹிநீம் ஶ்ரிதாஃ ||௯-௧௨||
மொழிபெயர்ப்பு
பொருள் ஆற்றலால் மாயைக்குட்பட்டவர்கள் திகைத்து, பேய் மற்றும் நாத்திக கருத்துக்களை கடைப்பிடிக்கிறார்கள். அந்த ஏமாற்றப்பட்ட நிலையில், அவர்களின் நலனுக்கான நம்பிக்கைகள் வீணாகின்றன, அவர்களின் பலனளிக்கும் செயல்கள் வீணாகின்றன, மேலும் அவர்களின் அறிவு கலாச்சாரம் குழப்பமடைகிறது.
ஶ்லோக 13
மஹாத்மாநஸ்து மாம் பார்த தைவீம் ப்ரக்ருதிமாஶ்ரிதாஃ |
பஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூதாதிமவ்யயம் ||௯-௧௩||
மொழிபெயர்ப்பு
ஆனால், என் தெய்வீக ஆற்றலில் அடைக்கலம் எடுக்கும் உயர்ந்த ஆன்மாக்கள், ஓ பார்த, என்னை, அனைத்துப் படைப்புகளின் பிறப்பிடமான கிருஷ்ணபகவான் ஆக அறிந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மனதை என்னிடமே நிலைநிருத்தி என் பக்தியில் ஈடுபடுகிறார்கள்.
ஶ்லோக 14
ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஶ்ச த்ருடவ்ரதாஃ |
நமஸ்யந்தஶ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே ||௯-௧௪||
மொழிபெயர்ப்பு
எப்பொழுதும் என் தெய்வீக மகிமைகளைப் பாடி, மிகுந்த உறுதியுடன் பாடுபட்டு, பணிவுடன் என் முன் பணிந்து, அவர்கள் என்னை அன்பான பக்தியுடன் தொடர்ந்து வணங்குகிறார்கள்.
ஶ்லோக 15
ஜ்ஞாநயஜ்ஞேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸதே |
ஏகத்வேந ப்ருதக்த்வேந பஹுதா விஶ்வதோமுகம் ||௯-௧௫||
மொழிபெயர்ப்பு
மற்றவர்கள், அறிவை வளர்க்கும் யாகத்தில் ஈடுபட்டு, பல வழிகளில் என்னை வழிபடுகிறார்கள். சிலர் என்னை வேறுபடுத்தப்படாத ஒருமையாக அவர்களிடமிருந்து வேறுபடாததாகப் பார்க்கிறார்கள். மற்றவர்கள் என்னை அவர்களிடமிருந்து தனியாகப் பார்க்கிறார்கள். மற்றும் பலர் என் பிரபஞ்ச வடிவத்தின் எல்லையற்ற வெளிப்பாடுகளில் என்னை வணங்குகிறார்கள்.
ஶ்லோக 16
அஹம் க்ரதுரஹம் யஜ்ஞஃ ஸ்வதாஹமஹமௌஷதம் |
மந்த்ரோऽஹமஹமேவாஜ்யமஹமக்நிரஹம் ஹுதம் ||௯-௧௬||
மொழிபெயர்ப்பு
நானே வேத சடங்குகள், நானே பலி, நானே முன்னோர்களுக்குப் படைக்கப்பட்ட ப்ரஸாதம். நான் மருத்துவ மூலிகை, நான் வேதமந்திரம். நான் நெய் ஆக மாற்றப்பட்ட வெண்ணை; நான் நெருப்பு (அக்னி) மற்றும் அர்ப்பணிக்கப்படும் செயல். இந்த பிரபஞ்சத்தின், நான் தந்தை; நான் தாயும் கூட, பேணும், பேரருளும் கூட. நான் புனிதப்படுத்தபடுத்துபவன், அறிவின் குறிக்கோள், ஓம் என்ற புனிதமான எழுத்து. நான் ரிக்வேதம், ஸாமவேதம், மற்றும் யஜுர் வேதம்.
ஶ்லோக 17
பிதாஹமஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹஃ |
வேத்யம் பவித்ரமோம்கார ரு'க்ஸாம யஜுரேவ ச ||௯-௧௭||
மொழிபெயர்ப்பு
நானே வேத சடங்குகள், நானே பலி, நானே முன்னோர்களுக்குப் படைக்கப்பட்ட ப்ரஸாதம். நான் மருத்துவ மூலிகை, நான் வேதமந்திரம். நான் நெய் ஆக மாற்றப்பட்ட வெண்ணை; நான் நெருப்பு (அக்னி) மற்றும் அர்ப்பணிக்கப்படும் செயல். இந்த பிரபஞ்சத்தின், நான் தந்தை; நான் தாயும் கூட, பேணும், பேரருளும் கூட. நான் புனிதப்படுத்தபடுத்துபவன், அறிவின் குறிக்கோள், ஓம் என்ற புனிதமான எழுத்து. நான் ரிக்வேதம், ஸாமவேதம், மற்றும் யஜுர் வேதம்.
ஶ்லோக 18
கதிர்பர்தா ப்ரபுஃ ஸாக்ஷீ நிவாஸஃ ஶரணம் ஸுஹ்ருத் |
ப்ரபவஃ ப்ரலயஃ ஸ்தாநம் நிதாநம் பீஜமவ்யயம் ||௯-௧௮||
மொழிபெயர்ப்பு
நான் அனைத்து உயிரினங்களின் உச்ச இலக்கு, மேலும் நான் அவற்றின் பராமரிப்பாளர், எஜமானர், சான்று, உறைவிடம், மற்றும் நண்பர். நான் படைப்பின் தோற்றம், முடிவு மற்றும் இளைப்பாறும் இடம்; நான் களஞ்சியம் மற்றும் நித்திய விதை.
ஶ்லோக 19
தபாம்யஹமஹம் வர்ஷம் நிக்ருஹ்ணாம்யுத்ஸ்ரு'ஜாமி ச |
அம்ருதம் சைவ ம்ருத்யுஶ்ச ஸதஸச்சாஹமர்ஜுந ||௯-௧௯||
மொழிபெயர்ப்பு
நான் சூரியனைப் போல வெப்பத்தை வெளிப்படுத்துகிறேன், நான் மழையை தடுத்து மற்றும் வழங்குகிறேன். நான் அழியாமை மற்றும் மரணத்தின் உருவகமாக இருப்பவன். ஓ அர்ஜுனா நான் மாய உரு மற்றும் பொருள்
ஶ்லோக 20
த்ரைவித்யா மாம் ஸோமபாஃ பூதபாபா
யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர்கதிம் ப்ரார்தயந்தே |
தே புண்யமாஸாத்ய ஸுரேந்த்ரலோக-
மஶ்நந்தி திவ்யாந்திவி தேவபோகாந் ||௯-௨௦||
மொழிபெயர்ப்பு
வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ள பலன் தரும் வேதசடங்குகளில் விருப்பம் உள்ளவர்கள் சடங்குகள், யாகங்கள் மூலம் என்னை வணங்குகிறார்கள். யாகங்களில் எஞ்சியிருக்கும் ஸோம ரஸத்தைக் குடித்து, பாவத்திலிருந்து தூய்மையடைந்து, சொர்க்கம் செல்ல முற்படுகிறார்கள். தங்கள் புண்ணிய செயல்களால், சொர்க்கத்தின் அரசனான இந்திரனின் இருப்பிடத்திற்குச் சென்று, தேவலோகத் தேவர்களின் இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
ஶ்லோக 21
தே தம் புக்த்வா ஸ்வர்கலோகம் விஶாலம்
க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஶந்தி |
ஏவம் த்ரயீதர்மமநுப்ரபந்நா
கதாகதம் காமகாமா லபந்தே ||௯-௨௧||
மொழிபெயர்ப்பு
அவர்கள் தேவலோக இன்பங்களை அனுபவித்து, அவர்களின் தகுதிகள் தீர்ந்து, பூமிக்கு திரும்புகிறார்கள். இவ்வாறு, வேத சம்பிரதாயங்களைப் பின்பற்றுபவர்கள், இன்பப் பொருட்களை விரும்பி, மீண்டும் மீண்டும் இவ்வுலகிற்கு வந்து செல்கின்றனர்.
ஶ்லோக 22
அநந்யாஶ்சிந்தயந்தோ மாம் யே ஜநாஃ பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் ||௯-௨௨||
மொழிபெயர்ப்பு
எப்பொழுதும் மனதை என்னிடம் நிலைநிருத்தி, என்னிடம் பிரத்யேக பக்தியில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள். எவருடைய மனம் எப்பொழுதும் என்னில் லயிக்கப்படுகிறதோ, அவர்களுக்கு, அவர்களிடம் இல்லாததைக் கொடுத்து, ஏற்கனவே அவர்கள் உடைமையாக பெற்றிருப்பதை பாதுகாக்கிறேன்.
ஶ்லோக 23
யேऽப்யந்யதேவதா பக்தா யஜந்தே ஶ்ரத்தயாந்விதாஃ |
தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம் ||௯-௨௩||
மொழிபெயர்ப்பு
குந்தியின் மகனே, மற்ற தெய்வங்களை உண்மையாக வணங்கும் பக்தர்களும் என்னையும் வழிபடுகின்றனர். ஆனால் அவர்கள் அவ்வாறு தவறான முறையில் செய்கிறார்கள்.
ஶ்லோக 24
அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச |
ந து மாமபிஜாநந்தி தத்த்வேநாதஶ்ச்யவந்தி தே ||௯-௨௪||
மொழிபெயர்ப்பு
நான் அனைத்து தியாகங்களையும் அனுபவிப்பவன் மற்றும் நானே அனைத்து தியாகங்களுக்கும் உரிய இறைவன். ஆனால் என் தெய்வீக இயல்பை உணரத் தவறியவர்கள் மீண்டும் பிறக்க வேண்டும்.
ஶ்லோக 25
யாந்தி தேவவ்ரதா தேவாந்பித்ரூ'ந்யாந்தி பித்ரு'வ்ரதாஃ |
பூதாநி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்யாஜிநோऽபி மாம் ||௯-௨௫||
மொழிபெயர்ப்பு
தேவலோக தெய்வங்களை வழிபடுபவர்கள் தேவலோக தெய்வங்களுக்கு இடையே பிறக்கிறார்கள், மூதாதையர்களை வணங்குபவர்கள் முன்னோர்களிடம் செல்கிறார்கள், பேய்களை வணங்குபவர்கள் அத்தகைய உயிரினங்களில் பிறக்கிறார்கள், என்னுடைய பக்தர்கள் என்னிடம் மட்டுமே வருகிறார்கள்
ஶ்லோக 26
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி |
ததஹம் பக்த்யுபஹ்ருதமஶ்நாமி ப்ரயதாத்மநஃ ||௯-௨௬||
மொழிபெயர்ப்பு
என் பக்தன் பக்தியுடன் தூய்மையான உணர்வால் சமர்பிக்கும் ஒரு இலை, ஒரு பூ, ஒரு பழம், அல்லது தண்ணீர் கூட நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்.
ஶ்லோக 27
யத்கரோஷி யதஶ்நாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத் |
யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மதர்பணம் ||௯-௨௭||
மொழிபெயர்ப்பு
குந்தியின் மகனே, நீ எதைச் செய்தாலும், எதைச் சப்பிட்டாலும், புனிதமான நெருப்புக்குப் எதைக்காணிக்கையாக் கொடுத்தாலும், எதைப் பரிசாகக் கொடுத்தாலும், என்ன துறவறம் செய்கிறாயோ, அவற்றை எனக்கு காணிக்கையாகச் செய்.
ஶ்லோக 28
ஶுபாஶுபபலைரேவம் மோக்ஷ்யஸே கர்மபந்தநைஃ |
ஸம்ந்யாஸயோகயுக்தாத்மா விமுக்தோ மாமுபைஷ்யஸி ||௯-௨௮||
மொழிபெயர்ப்பு
உன்னுடைய எல்லா வேலைகளையும் எனக்கு அர்ப்பணிப்பதன் மூலம், நல்ல மற்றும் கெட்ட விளைவுகளின் அடிமைத்தனத்திலிருந்து நீ விடுபடுவாய். துறப்பதன் மூலம் உனது மனம் என்னுடன் இணைந்திருந்தால், நீ விடுதலை பெற்று என்னை அடைவாய்.
ஶ்லோக 29
ஸமோऽஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோऽஸ்தி ந ப்ரியஃ |
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் ||௯-௨௯||
மொழிபெயர்ப்பு
நான் எல்லா உயிர்களையும் சமமாகவே பாவிக்கிறேன்; நான் நான் யாரிடமும் பாரபட்சம் மற்றும் விரோதம் பாராட்டுவதில்லை. ஆனால் அன்புடன் என்னை வணங்கும் பக்தர்கள் என்னில் வசிக்கிறார்கள், நான் அவர்களில் வசிக்கிறேன்.
ஶ்லோக 30
அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமநந்யபாக் |
ஸாதுரேவ ஸ மந்தவ்யஃ ஸம்யக்வ்யவஸிதோ ஹி ஸஃ ||௯-௩௦||
மொழிபெயர்ப்பு
கொடிய பாவிகள் என்னைப் பிரத்தியேக பக்தியுடன் வணங்கினாலும், அவர்கள் சரியான தீர்மானத்தைச் செய்ததால் அவர்கள் நீதிமான்களாகக் கருதப்படுவார்கள்.
ஶ்லோக 31
க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஶஶ்வச்சாந்திம் நிகச்சதி |
கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்தஃ ப்ரணஶ்யதி ||௯-௩௧||
மொழிபெயர்ப்பு
விரைவில் அவர்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாக மாறி நிலையான அமைதியை அடைகிறார்கள். குந்தியின் மகனே, என்னுடைய எந்த ஒரு பக்தனும் ஒருபொழுதும் அழிவதில்லை என்பதை தைரியமாக அறிவிக்கவும்.
ஶ்லோக 32
மாம் ஹி பார்த வ்யபாஶ்ரித்ய யேऽபி ஸ்யுஃ பாபயோநயஃ |
ஸ்த்ரியோ வைஶ்யாஸ்ததா ஶூத்ராஸ்தேऽபி யாந்தி பராம் கதிம் ||௯-௩௨||
மொழிபெயர்ப்பு
என்னிடத்தில் அடைக்கலம் புகுபவர்கள் அனைவரும், அவர்களின் பிறப்பு, இனம், பாலினம் அல்லது ஜாதி எதுவாக இருந்தாலும், சமூகம் இகழ்ந்தாலும் கூட, உயர்ந்த நிலையை அடைவார்கள்.
வெறும் வாசிப்பு மட்டுமல்ல—
சொந்த தியான வீடியோக்களை உருவாக்குங்கள்.
புனிதமான ஸ்லோகங்களை உலகத்துடன் பகிர்ந்துகொள்ள அழகான, சினிமா வீடியோக்களாக மாற்றவும். உங்கள் பின்புலத்தைத் தேர்வுசெய்து, மந்திர உச்சாடனத்தை இணைத்து, நவீன வடிவில் கீதையின் ஒளியைப் பரப்புங்கள்.
இந்த அம்சங்களுக்கு பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
- உயர்தர பின்னணி கலைப்படைப்பு
- ஒத்திசைக்கப்பட்ட சமஸ்கிருதம் மற்றும் பொருள் உரை
- அற்புதமான உச்சாடனம் மற்றும் இசை
ஆழ்ந்த அனுபவத்தைப் பெறுங்கள்
நித்ய கீதையின் முழுப் பதிப்போடு ஒரு சினிமா ஆன்மீகப் பயணத்தைத் தொடங்குங்கள். உயர்தர உச்சாடனம், உண்மையான மொழிபெயர்ப்புகள் மற்றும் உங்கள் உள்ளங்கையில் ஒரு அமைதியான தியான சரணாலயம்.