அத்தியாயம் 8

அக்ஷரப்ரஹ்மயோக

அத அஷ்டமோऽத்யாயஃ

28 பிரிவுகள்
அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 1

அர்ஜுந உவாச |

கிம் தத் ப்ரஹ்ம கிமத்யாத்மம் கிம் கர்ம புருஷோத்தம |

அதிபூதம் ச கிம் ப்ரோக்தமதிதைவம் கிமுச்யதே ||௮-௧||

அர்ஜுந உவாச

மொழிபெயர்ப்பு

அர்ஜுனன் கூறினார்: ஓ ஒப்புயர்வற்றவரே, ப்ரஹ்மம் என்றால் என்ன? (முழு உண்மை), அத்யாத்மா என்றால் என்ன? , கர்மா என்றால் என்ன? அதிபூதம் என்று கூறப்படுவது எது, அதிதெய்வம் என்று கூறப்படுவது யார்? உடலில் அதியஞ்ஞன் யார், அவர் எவ்வாறு அதியஞ்ஞன்? ஓ கிருஷ்ணா, உறுதியான மனம் கொண்டவர்களால் மரணத்தின் பொழுது நீங்கள் எப்படி அறியப்படுவீர்கள்?

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 2

அதியஜ்ஞஃ கதம் கோऽத்ர தேஹேऽஸ்மிந்மதுஸூதந |

ப்ரயாணகாலே ச கதம் ஜ்ஞேயோऽஸி நியதாத்மபிஃ ||௮-௨||

மொழிபெயர்ப்பு

அர்ஜுனன் கூறினார்: ஓ ஒப்புயர்வற்றவரே, ப்ரஹ்மம் என்றால் என்ன? (முழு உண்மை), அத்யாத்மா என்றால் என்ன? , கர்மா என்றால் என்ன? அதிபூதம் என்று கூறப்படுவது எது, அதிதெய்வம் என்று கூறப்படுவது யார்? உடலில் அதியஞ்ஞன் யார், அவர் எவ்வாறு அதியஞ்ஞன்? ஓ கிருஷ்ணா, உறுதியான மனம் கொண்டவர்களால் மரணத்தின் பொழுது நீங்கள் எப்படி அறியப்படுவீர்கள்?

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 3

ஶ்ரீபகவாநுவாச |

அக்ஷரம் ப்ரஹ்ம பரமம் ஸ்வபாவோऽத்யாத்மமுச்யதே |

பூதபாவோத்பவகரோ விஸர்கஃ கர்மஸம்ஜ்ஞிதஃ ||௮-௩||

ஶ்ரீ பகவான் கூறினார்

மொழிபெயர்ப்பு

பகவான் கூறினார்: அழியாத உன்னதமான பொருள் ப்ரஹ்மன் என்று அழைக்கப்படுகிறது; ஒருவரின் சுயமே அத்யாத்மா என்று அழைக்கப்படுகிறது. உயிரினங்களின் பொருள் ஆளுமை மற்றும் அதன் வளர்ச்சி தொடர்பான செயல்கள் கர்மா அல்லது பலனளிக்கும் நடவடிக்கைகள் என்று அழைக்கப்படுகின்றன.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 4

அதிபூதம் க்ஷரோ பாவஃ புருஷஶ்சாதிதைவதம் |

அதியஜ்ஞோऽஹமேவாத்ர தேஹே தேஹப்ருதாம் வர ||௮-௪||

மொழிபெயர்ப்பு

ஓ தேசோரூபம் கொண்ட ஆத்மாக்களில் சிறந்தவரே, தொடர்ந்து மாறிவரும் உடல் வெளிப்பாடு அதிபூதம் எனப்படும்; இந்த படைப்பில் தேவலோக கடவுள்களை தலைமை தாங்கும் கடவுளின் உலகளாவிய வடிவம் அதிதெய்வம் என்று அழைக்கப்படுகிறது; ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் வசிக்கும் நான், அதியஞ்ஞன் அல்லது அனைத்து தியாகங்களின் இறைவன் என்று அழைக்கப்படுகிறேன்.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 5

அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம் |

யஃ ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஶயஃ ||௮-௫||

மொழிபெயர்ப்பு

மரணத்தின் போது என்னை நினைத்து உடலை துறப்பவர்கள் என்னிடம் வருவார்கள். இதில் நிச்சயமாக எந்த சந்தேகமும் இல்லை.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 6

யம் யம் வாபி ஸ்மரந்பாவம் த்யஜத்யந்தே கலேவரம் |

தம் தமேவைதி கௌந்தேய ஸதா தத்பாவபாவிதஃ ||௮-௬||

மொழிபெயர்ப்பு

குந்தியின் மகனே, ஒருவர் இறப்பின் பொழுது உடலைத் துறக்கும் நேரத்தில் எதனை நினைவு செய்கிறாரோ, அந்த நிலையை எப்பொழுதும் அத்தகைய சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறார்.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 7

தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு மாமநுஸ்மர யுத்ய ச |

மய்யர்பிதமநோபுத்திர்மாமேவைஷ்யஸ்யஸம்ஶயஃ (orஸம்ஶயம்) ||௮-௭||

மொழிபெயர்ப்பு

ஆதலால், எப்பொழுதும் என்னை நினைவு செய்து, போர் செய்யும் கடமையையும் செய். மனமும் புத்தியும் என்னிடம் சரணடைந்தால், நீ நிச்சயமாக என்னை அடைவாய்; இதில், எந்த சந்தேகமும் இல்லை.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 8

அப்யாஸயோகயுக்தேந சேதஸா நாந்யகாமிநா |

பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்தாநுசிந்தயந் ||௮-௮||

மொழிபெயர்ப்பு

ஓ பார்த், பயிற்சியின் மூலம், உன்னத தெய்வீக புருஷனான என்னை நினைவு செய்வதில் நீ தொடர்ந்து மனதை ​​விலகாமல் ஈடுபடுத்தும்பொழுது, நீ நிச்சயமாக என்னை அடைவாய்.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 9 மற்றும் 10

கவிம் புராணமநுஶாஸிதார-

மணோரணீயம்ஸமநுஸ்மரேத்யஃ |

ஸர்வஸ்ய தாதாரமசிந்த்யரூப-

மாதித்யவர்ணம் தமஸஃ பரஸ்தாத் ||௮-௯||

ப்ரயாணகாலே மநஸாऽசலேந

பக்த்யா யுக்தோ யோகபலேந சைவ |

ப்ருவோர்மத்யே ப்ராணமாவேஶ்ய ஸம்யக்

ஸ தம் பரம் புருஷமுபைதி திவ்யம் ||௮-௧௦||

மொழிபெயர்ப்பு

கடவுள் ஸர்வ ஞானமும் பெற்றவர், மிகவும் பழமையானவர், கட்டுப்படுத்துபவர், நுட்பமானதை விட நுட்பமானவர், அவர் அனைவரின் ஆதரவு, மற்றும் கற்பனை செய்ய முடியாத தெய்வீக வடிவத்தை உடையவர்; அவர் சூரியனை விட பிரகாசமானவர் மற்றும் அனைத்து அறியாமை இருளுக்கும் அப்பாற்பட்டவர். எவரொருவர், மரணத்தின் சமயம் யோகப் பயிற்சியால் அசையாத மனதுடன் புருவங்களுக்கு இடையே பிராணனை (உயிர் காற்றை) நிலைநிருத்தி, மிகுந்த பக்தியுடன் தெய்வீகப் பெருமானை நிலையாக நினைவு கூறுவாரோ, அவர் கடவுளை நிச்சயமாக அடைவார்.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 11

யதக்ஷரம் வேதவிதோ வதந்தி

விஶந்தி யத்யதயோ வீதராகாஃ |

யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி

தத்தே பதம் ஸம்க்ரஹேண ப்ரவக்ஷ்யே ||௮-௧௧||

மொழிபெயர்ப்பு

வேத அறிஞர்கள் அவரை அழியாதவர் என்று வர்ணிக்கின்றனர்; பெரிய துறவிகள் ப்ரஹ்மச்சரியத்தின் சபதத்தை கடைப்பிடித்து, உலக இன்பங்களைத் துறந்து அவருக்குள் நுழைகிறார்கள். அந்த இலக்கை அடையும் பாதையை இப்பொழுது சுருக்கமாக உனக்கு விளக்குகிறேன்.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 12 மற்றும் 13

ஸர்வத்வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச |

மூத்ந்யார்தாயாத்மநஃ ப்ராணமாஸ்திதோ யோகதாரணாம் ||௮-௧௨||

ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந்மாமநுஸ்மரந் |

யஃ ப்ரயாதி த்யஜந்தேஹம் ஸ யாதி பரமாம் கதிம் ||௮-௧௩||

மொழிபெயர்ப்பு

உடலின் அனைத்து வாயில்களையும் அடக்கி, மனதை இதயப் பகுதியில் நிலைநிருத்தி, உயிர் மூச்சை தலைக்கு இழுத்து, உறுதியான யோகச் செறிவில் நிலைபெற வேண்டும். பரம புருஷனாகிய என்னை நினைவு செய்து, ஓம் என்ற எழுத்தை உச்சரித்துக்கொண்டே உடலை விட்டுப் பிரிந்தவன், உன்னதமான இலக்கை அடைவான்.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 14

அநந்யசேதாஃ ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஶஃ |

தஸ்யாஹம் ஸுலபஃ பார்த நித்யயுக்தஸ்ய யோகிநஃ ||௮-௧௪||

மொழிபெயர்ப்பு

ஓ பார்த்தா, எப்பொழுதும் என்னைப் பற்றியே பிரத்யேக பக்தியுடன் நினைக்கும் அந்த யோகிகளுக்கு, அவர்கள் தொடர்ந்து முழுமையாக என்னில் ஈடுபடுவதால் என்னை எளிதில் அடைய முடியும்.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 15

மாமுபேத்ய புநர்ஜந்ம துஃகாலயமஶாஶ்வதம் |

நாப்நுவந்தி மஹாத்மாநஃ ஸம்ஸித்திம் பரமாம் கதாஃ ||௮-௧௫||

மொழிபெயர்ப்பு

என்னை அடைந்த பிறகு, பெரிய ஆத்மாக்கள் இந்த உலகில் மறுபிறப்பிற்க்கு உட்பட்டவர்கள் அல்ல, அது நிலையற்றது மற்றும் துன்பம் நிறைந்தது, ஏனென்றால் அவர்கள் உயர்ந்த பரிபூரணத்தை அடைந்துள்ளனர்.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 16

ஆப்ரஹ்மபுவநால்லோகாஃ புநராவர்திநோऽர்ஜுந |

மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்யதே ||௮-௧௬||

மொழிபெயர்ப்பு

ஓ அர்ஜுனா, இந்த பொருள் சிருஷ்டியின் அனைத்து உலகங்களிலும், ப்ரஹ்மாவின் உயர்ந்த இருப்பிடம் வரை, நீ மறுபிறப்புக்கு உட்பட்டு இருப்பாய். ஆனால், குந்தியின் மகனே, என்னுடைய இருப்பிடத்தை அடைந்தவுடன், மறுபிறப்பு இல்லை.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 17

ஸஹஸ்ரயுகபர்யந்தமஹர்யத் ப்ரஹ்மணோ விதுஃ |

ராத்ரிம் யுகஸஹஸ்ராந்தாம் தேऽஹோராத்ரவிதோ ஜநாஃ ||௮-௧௭||

மொழிபெயர்ப்பு

ப் 3 ரஹ்மாவின் ஒரு நாள் (கல்பம்) ஆயிரம் சுழற்சிகள் நீடிக்கும். நான்கு யுகங்கள் (மஹாயுகம்) ஆயிரம் சுழற்சிகள் நீடிக்கும், மேலும் அவரது இரவும் அதே காலத்திற்கு நீடிக்கிறது. இதை அறிந்த ஞானிகள் இரவும் பகலும் பற்றிய யதார்த்தத்தைப் புரிந்துகொள்கிறார்கள்.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 18

அவ்யக்தாத் வ்யக்தயஃ ஸர்வாஃ ப்ரபவந்த்யஹராகமே |

ராத்ர்யாகமே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸம்ஜ்ஞகே ||௮-௧௮||

மொழிபெயர்ப்பு

ப் 3 ரஹ்மாவின் நாளின்தோற்றத்தில், அனைத்து உயிரினங்களும் வெளிப்படையான மூலத்திலிருந்து வெளிப்படுகின்றன. மேலும் அவரது இரவில், அனைத்து உடலமைந்த உயிரினங்களும் மீண்டும் அவற்றின் வெளிப்படுத்தப்படாத மூலத்தில் ஒன்றிணைகின்றன.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 19

பூதக்ராமஃ ஸ ஏவாயம் பூத்வா பூத்வா ப்ரலீயதே |

ராத்ர்யாகமேऽவஶஃ பார்த ப்ரபவத்யஹராகமே ||௮-௧௯||

மொழிபெயர்ப்பு

ப்ரஹ்மாவின் வருகையுடன் பல உயிரினங்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன, மேலும் அண்ட இரவின் வருகையில் மீண்டும் உள் வாங்கப்படுகின்றன, அடுத்த அண்ட நாளின் வருகையில் தானாகவே வெளிப்படும்.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 20

பரஸ்தஸ்மாத்து பாவோऽந்யோऽவ்யக்தோऽவ்யக்தாத்ஸநாதநஃ |

யஃ ஸ ஸர்வேஷு பூதேஷு நஶ்யத்ஸு ந விநஶ்யதி ||௮-௨௦||

மொழிபெயர்ப்பு

இந்த வெளிப்படுத்தப்பட்ட மேலும், இன்னும் வெளிப்படுத்தப்படாத படைப்பிற்கு அப்பாற்பட்ட வெளிப்படுத்தப்படாத நித்திய பரிமாணம் உள்ளது. மற்ற அனைத்தும் முடிவுறும் பொழுதிலும் இந்த நித்திய பரிமாணத்தின் ஆதிக்கம் நின்றுவிடுவதில்லை.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 21

அவ்யக்தோऽக்ஷர இத்யுக்தஸ்தமாஹுஃ பரமாம் கதிம் |

யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம ||௮-௨௧||

மொழிபெயர்ப்பு

அந்த வெளிப்படுத்தப்படாத பரிமாணமே மிக உயர்ந்த இலக்காகும், அதை அடைந்தவுடன், இந்த மரண உலகத்திற்கு ஒருவர் திரும்புவதில்லை. அதுவே எனது உயர்ந்த இருப்பிடம்.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 22

புருஷஃ ஸ பரஃ பார்த பக்த்யா லப்யஸ்த்வநந்யயா |

யஸ்யாந்தஃஸ்தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம் ||௮-௨௨||

மொழிபெயர்ப்பு

ஒப்புயர்வற்ற எல்லோரிலும் மேலான தெய்வீக புருஷர் இருப்பில் உள்ள அனைத்தையும் விட மேலானவர். அவர் எங்கும் நிறைந்திருந்தாலும், எல்லா உயிர்களும் அவரில் அமைந்திருந்தாலும், பக்தியின் மூலம் மட்டுமே அவரை அறிய முடியும்.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 23

யத்ர காலே த்வநாவ்ருத்திமாவ்ருத்திம் சைவ யோகிநஃ |

ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி பரதர்ஷப ||௮-௨௩||

மொழிபெயர்ப்பு

பரத வம்சத்தினரின் சிறந்தவனே, இவ்வுலகை விட்டுச் செல்வதற்கான பல்வேறு வழிகளை நான் இப்பொழுது விவரிக்கிறேன், அவற்றில் ஒன்று விடுதலைக்கும் மற்றொன்று மறுபிறப்புக்கும் வழிவகுக்கும். பரம ப்ரஹ்மனை அறிந்து, மற்றும் சூரியனின் வடக்குப் பாதையின் ஆறு மாதங்களிலும், சந்திரனின் பிரகாசமான பதினைந்து நாட்களிலும், பகலின் பிரகாசமான பகுதியிலும் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்லுபவர்கள், உயர்ந்த இலக்கை அடைகிறார்கள். சூரியனின் தென்கோடியில் ஆறுமாதங்கள், சந்திரனின் இருண்ட பதினைந்து நாட்கள், புகைக்காலம், இரவு ஆகிய ஆறுமாதங்களில் வேதநெறிகளை கடைப்பிடிப்பவர்கள் தேவலோக உறைவிடங்களை அடைகிறார்கள். தேவலோக இன்பங்களை அனுபவித்த பிறகு, அவர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்புகிறார்கள். இந்த இரண்டு, பிரகாசமான மற்றும் இருண்ட பாதைகள், எப்பொழுதும் இந்த உலகில் உள்ளன. ஒளியின் வழி விடுதலைக்கும், இருளின் வழி மறுபிறப்புக்கும் வழிவகுக்கும்.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 24

அக்நிர்ஜோதிரஹஃ ஶுக்லஃ ஷண்மாஸா உத்தராயணம் |

தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜநாஃ ||௮-௨௪||

மொழிபெயர்ப்பு

பரத வம்சத்தினரின் சிறந்தவனே, இவ்வுலகை விட்டுச் செல்வதற்கான பல்வேறு வழிகளை நான் இப்பொழுது விவரிக்கிறேன், அவற்றில் ஒன்று விடுதலைக்கும் மற்றொன்று மறுபிறப்புக்கும் வழிவகுக்கும். பரம ப்ரஹ்மனை அறிந்து, மற்றும் சூரியனின் வடக்குப் பாதையின் ஆறு மாதங்களிலும், சந்திரனின் பிரகாசமான பதினைந்து நாட்களிலும், பகலின் பிரகாசமான பகுதியிலும் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்லுபவர்கள், உயர்ந்த இலக்கை அடைகிறார்கள். சூரியனின் தென்கோடியில் ஆறுமாதங்கள், சந்திரனின் இருண்ட பதினைந்து நாட்கள், புகைக்காலம், இரவு ஆகிய ஆறுமாதங்களில் வேதநெறிகளை கடைப்பிடிப்பவர்கள் தேவலோக உறைவிடங்களை அடைகிறார்கள். தேவலோக இன்பங்களை அனுபவித்த பிறகு, அவர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்புகிறார்கள். இந்த இரண்டு, பிரகாசமான மற்றும் இருண்ட பாதைகள், எப்பொழுதும் இந்த உலகில் உள்ளன. ஒளியின் வழி விடுதலைக்கும், இருளின் வழி மறுபிறப்புக்கும் வழிவகுக்கும்.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 25

தூமோ ராத்ரிஸ்ததா க்ருஷ்ணஃ ஷண்மாஸா தக்ஷிணாயநம் |

தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதிர்யோகீ ப்ராப்ய நிவர்ததே ||௮-௨௫||

மொழிபெயர்ப்பு

பரத வம்சத்தினரின் சிறந்தவனே, இவ்வுலகை விட்டுச் செல்வதற்கான பல்வேறு வழிகளை நான் இப்பொழுது விவரிக்கிறேன், அவற்றில் ஒன்று விடுதலைக்கும் மற்றொன்று மறுபிறப்புக்கும் வழிவகுக்கும். பரம ப்ரஹ்மனை அறிந்து, மற்றும் சூரியனின் வடக்குப் பாதையின் ஆறு மாதங்களிலும், சந்திரனின் பிரகாசமான பதினைந்து நாட்களிலும், பகலின் பிரகாசமான பகுதியிலும் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்லுபவர்கள், உயர்ந்த இலக்கை அடைகிறார்கள். சூரியனின் தென்கோடியில் ஆறுமாதங்கள், சந்திரனின் இருண்ட பதினைந்து நாட்கள், புகைக்காலம், இரவு ஆகிய ஆறுமாதங்களில் வேதநெறிகளை கடைப்பிடிப்பவர்கள் தேவலோக உறைவிடங்களை அடைகிறார்கள். தேவலோக இன்பங்களை அனுபவித்த பிறகு, அவர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்புகிறார்கள். இந்த இரண்டு, பிரகாசமான மற்றும் இருண்ட பாதைகள், எப்பொழுதும் இந்த உலகில் உள்ளன. ஒளியின் வழி விடுதலைக்கும், இருளின் வழி மறுபிறப்புக்கும் வழிவகுக்கும்.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 26

ஶுக்லக்ருஷ்ணே கதீ ஹ்யேதே ஜகதஃ ஶாஶ்வதே மதே |

ஏகயா யாத்யநாவ்ருத்திமந்யயாவர்ததே புநஃ ||௮-௨௬||

மொழிபெயர்ப்பு

பரத வம்சத்தினரின் சிறந்தவனே, இவ்வுலகை விட்டுச் செல்வதற்கான பல்வேறு வழிகளை நான் இப்பொழுது விவரிக்கிறேன், அவற்றில் ஒன்று விடுதலைக்கும் மற்றொன்று மறுபிறப்புக்கும் வழிவகுக்கும். பரம ப்ரஹ்மனை அறிந்து, மற்றும் சூரியனின் வடக்குப் பாதையின் ஆறு மாதங்களிலும், சந்திரனின் பிரகாசமான பதினைந்து நாட்களிலும், பகலின் பிரகாசமான பகுதியிலும் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்லுபவர்கள், உயர்ந்த இலக்கை அடைகிறார்கள். சூரியனின் தென்கோடியில் ஆறுமாதங்கள், சந்திரனின் இருண்ட பதினைந்து நாட்கள், புகைக்காலம், இரவு ஆகிய ஆறுமாதங்களில் வேதநெறிகளை கடைப்பிடிப்பவர்கள் தேவலோக உறைவிடங்களை அடைகிறார்கள். தேவலோக இன்பங்களை அனுபவித்த பிறகு, அவர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்புகிறார்கள். இந்த இரண்டு, பிரகாசமான மற்றும் இருண்ட பாதைகள், எப்பொழுதும் இந்த உலகில் உள்ளன. ஒளியின் வழி விடுதலைக்கும், இருளின் வழி மறுபிறப்புக்கும் வழிவகுக்கும்.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 27

நைதே ஸ்ரு'தீ பார்த ஜாநந்யோகீ முஹ்யதி கஶ்சந |

தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோகயுக்தோ பவார்ஜுந ||௮-௨௭||

மொழிபெயர்ப்பு

இந்த இரண்டு பாதைகளின் ரகசியத்தை அறிந்த யோகிகள், ஓ பார்த்தா, ஒருபொழுதும் திகைப்பதில்லை. எனவே, எல்லா நேரங்களிலும் யோகத்தில் (கடவுளோடு ஐக்கியமாக) நிலைத்திரு.

அக்ஷரப்ரஹ்மயோக

ஶ்லோக 28

வேதேஷு யஜ்ஞேஷு தபஃஸு சைவ

தாநேஷு யத்புண்யபலம் ப்ரதிஷ்டம் |

அத்யேதி தத்ஸர்வமிதம் விதித்வா

யோகீ பரம் ஸ்தாநமுபைதி சாத்யம் ||௮-௨௮||

மொழிபெயர்ப்பு

இந்த ரகசியத்தை அறிந்த யோகிகள், வேதச் சடங்குகள், வேதங்களைப் படிப்பது, யாகங்கள் செய்தல், துறவுகள் மற்றும் தானங்கள் ஆகியவற்றின் பலன்களுக்கு அப்பாற்பட்ட தகுதியைப் பெறுகிறார்கள். அத்தகைய யோகிகள் உயர்ந்த இருப்பிடத்தை அடைகிறார்கள்.

ௐ தத்ஸதிதி ஶ்ரீமத்பகவத்கீதா ஸுபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாம் யோகஶாஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வதே அக்ஷரப்ரஹ்மயாகோ நமஷ்டமோத்யாயஃ

வெறும் வாசிப்பு மட்டுமல்ல—
சொந்த தியான வீடியோக்களை உருவாக்குங்கள்.

புனிதமான ஸ்லோகங்களை உலகத்துடன் பகிர்ந்துகொள்ள அழகான, சினிமா வீடியோக்களாக மாற்றவும். உங்கள் பின்புலத்தைத் தேர்வுசெய்து, மந்திர உச்சாடனத்தை இணைத்து, நவீன வடிவில் கீதையின் ஒளியைப் பரப்புங்கள்.

இந்த அம்சங்களுக்கு பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

  • உயர்தர பின்னணி கலைப்படைப்பு
  • ஒத்திசைக்கப்பட்ட சமஸ்கிருதம் மற்றும் பொருள் உரை
  • அற்புதமான உச்சாடனம் மற்றும் இசை
Video Generation Preview

ஆழ்ந்த அனுபவத்தைப் பெறுங்கள்

நித்ய கீதையின் முழுப் பதிப்போடு ஒரு சினிமா ஆன்மீகப் பயணத்தைத் தொடங்குங்கள். உயர்தர உச்சாடனம், உண்மையான மொழிபெயர்ப்புகள் மற்றும் உங்கள் உள்ளங்கையில் ஒரு அமைதியான தியான சரணாலயம்.