அக்ஷரப்ரஹ்மயோக - ஸ்லோகம் ஶ்லோக 9 மற்றும் 10
ஶ்லோக 9 மற்றும் 10
கவிம் புராணமநுஶாஸிதார-
மணோரணீயம்ஸமநுஸ்மரேத்யஃ |
ஸர்வஸ்ய தாதாரமசிந்த்யரூப-
மாதித்யவர்ணம் தமஸஃ பரஸ்தாத் ||௮-௯||
ப்ரயாணகாலே மநஸாऽசலேந
பக்த்யா யுக்தோ யோகபலேந சைவ |
ப்ருவோர்மத்யே ப்ராணமாவேஶ்ய ஸம்யக்
ஸ தம் பரம் புருஷமுபைதி திவ்யம் ||௮-௧௦||
மொழிபெயர்ப்பு
கடவுள் ஸர்வ ஞானமும் பெற்றவர், மிகவும் பழமையானவர், கட்டுப்படுத்துபவர், நுட்பமானதை விட நுட்பமானவர், அவர் அனைவரின் ஆதரவு, மற்றும் கற்பனை செய்ய முடியாத தெய்வீக வடிவத்தை உடையவர்; அவர் சூரியனை விட பிரகாசமானவர் மற்றும் அனைத்து அறியாமை இருளுக்கும் அப்பாற்பட்டவர். எவரொருவர், மரணத்தின் சமயம் யோகப் பயிற்சியால் அசையாத மனதுடன் புருவங்களுக்கு இடையே பிராணனை (உயிர் காற்றை) நிலைநிருத்தி, மிகுந்த பக்தியுடன் தெய்வீகப் பெருமானை நிலையாக நினைவு கூறுவாரோ, அவர் கடவுளை நிச்சயமாக அடைவார்.