அர்ஜுநவிஷாதயோக - ஸ்லோகம் ஶ்லோக 28, 29, 30, 31
ஶ்லோக 28, 29, 30, 31
க்ருபயா பரயாவிஷ்டோ விஷீதந்நிதமப்ரவீத் |
அர்ஜுந உவாச |
த்ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம் ||௧-௨௮||
ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிஶுஷ்யதி |
வேபதுஶ்ச ஶரீரே மே ரோமஹர்ஷஶ்ச ஜாயதே ||௧-௨௯||
காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே |
ந ச ஶக்நோம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மநஃ ||௧-௩௦||
நிமித்தாநி ச பஶ்யாமி விபரீதாநி கேஶவ |
ந ச ஶ்ரேயோऽநுபஶ்யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே ||௧-௩௧||
மொழிபெயர்ப்பு
அர்ஜுனன் கூறினார்: ஓ கிருஷ்ணா, என் சொந்த உறவினர்கள் ஒருவரை ஒருவர் கொல்லும் நோக்கத்துடன் போருக்கு அணிவகுத்து நிற்பதைப் பார்க்கும் பொழுது என் கை கால்கள் தொய்ந்து என் வாய் வறண்டு போகிறது. என் உடல் முழுதும் சிலிர்த்து நடுங்குகிறது. எனது வில்லான காண்டீவம் என் கையிலிருந்து நழுவுகிறது; எனது சருமம் முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது. ஊசலாடும் என் மனம் குழப்பத்தில் சுழல்கிறது. என்னால் இனி என்னை நிலையாக வைத்திருக்க முடியவில்லை. கேசீ என்ற அரக்கனைக் கொன்ற ஓ கிருஷ்ணா, நான் துரதிருஷ்டவசமான சகுனங்களை மட்டுமே பார்க்கிறேன். இந்தப் போரில் எனது சொந்த உறவினர்களைக் கொல்வதால் எந்தப் பயனும் வரும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.