அர்ஜுநவிஷாதயோக - ஸ்லோகம் ஶ்லோக 35
ஶ்லோக 35
ஏதாந்ந ஹந்துமிச்சாமி க்நதோऽபி மதுஸூதந |
அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோஃ கிம் நு மஹீக்ருதே ||௧-௩௫||
மொழிபெயர்ப்பு
இங்கு தங்களது ஐஸ்வர்ய சம்பத்து மற்றும் வாழ்க்கையையே பணயம் வைத்த ஆசிரியர்கள், தந்தைகள், மகன்கள், தாத்தாக்கள், தாய்வழி மாமன்கள், பேரன்கள், மாமனார்கள், பேர மருமகன்கள், மைத்துனர்கள், மற்றும் மற்ற உறவினர்கள் கூடியுள்ளனர். ஓ மதுசூதனா, அவர்கள் என்னை தாக்கினாலும் நான் அவர்களை அழிக்க விரும்பவில்லை. நாம் த்ருதராஷ்டிரரின் மகன்களைக் கொல்வதால் அடையும் மூவுலக ஆதிக்கத்தின் பயன் தான் என்ன? பூமியின் ஆதிக்கத்தை பற்றி என்ன சொல்வது?