அர்ஜுநவிஷாதயோக - ஸ்லோகம் ஶ்லோக 33 மற்றும் 34
ஶ்லோக 33 மற்றும் 34
யேஷாமர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகாஃ ஸுகாநி ச |
த இமேऽவஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ்த்யக்த்வா தநாநி ச ||௧-௩௩||
ஆசார்யாஃ பிதரஃ புத்ராஸ்ததைவ ச பிதாமஹாஃ |
மாதுலாஃ ஶ்வஶுராஃ பௌத்ராஃ ஶ்யாலாஃ ஸம்பந்திநஸ்ததா ||௧-௩௪||
மொழிபெயர்ப்பு
ஓ கிருஷ்ணா, எனக்கு ராஜ்யம் மற்றும் வெற்றியை அடைவதிலும் மற்றும் அவற்றினால் வரும் மகிழ்ச்சியிலும் விருப்பமில்லை. நாம் யாருக்காக ஆவலுடன் ராஜ்யம், இன்பங்கள், தவிர இந்த வாழ்க்கையையே வாழ விரும்புகிறோமோ அவர்களே நம்முன் போரிட நிற்கும்பொழுது இந்த ராஜ்யம், இன்பங்கள், தவிர வாழ்க்கையின் பயன் தான் என்ன? இங்கு தங்களது ஐஸ்வர்ய சம்பத்து மற்றும் வாழ்க்கையையே பணயம் வைத்த ஆசிரியர்கள், தந்தைகள், மகன்கள், தாத்தாக்கள், தாய்வழி மாமன்கள், பேரன்கள், மாமனார்கள், பேர மருமகன்கள், மைத்துனர்கள், மற்றும் மற்ற உறவினர்கள் கூடியுள்ளனர். ஓ மதுசூதனா, அவர்கள் என்னை தாக்கினாலும் நான் அவர்களை அழிக்க விரும்பவில்லை. நாம் த்ருதராஷ்டிரரின் மகன்களைக் கொல்வதால் அடையும் மூவுலக ஆதிக்கத்தின் பயன் தான் என்ன? பூமியின் ஆதிக்கத்தை பற்றி என்ன சொல்வது?